5. ஜெபமே ஜெயம்
சிலுவை அடையாளம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்
மூவொரு இறைவன் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப்போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்…
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் ஆமென்.
மங்கள வார்த்தை மன்றாட்டு
அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே,
தூய மரியே இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள்
இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.
நம்பிக்கை அறிக்கை,
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார், பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம்நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து வாழ்வோருக்கு இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை
நம்புகிறேன். பாவமன்னிப்பை நம்புகிறேன்.உடலின் உயிர்த்தெழுதலை நம்புகிறேன்.நிலைவாழ்வை நம்புகிறேன்.ஆமென்.
மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும் நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் மனம் வருந்துகிறேன் உமது அருள் உதவியால் இனிமேல் பாவங்கள் செய்வதில்லை என்றும் பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கூறுகிறேன் ஆமென்.